Tuesday, November 17, 2009

அன்னை





பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்த அன்னை
முத்தமிட்டு கன்னமதை
ஈரமாக்கும் அன்னை
பாரினிலே உயர்வதற்கு
பாசம் கொடுத்த அன்னை
முக்கனிகள் போல எம்மை
வளர்த்து விட்ட அன்னை
கல்வியிலே அறிவூட்டி
பாவலராய் மாற்ற
பாடுபட்டு பாரினிலே
உழைத்த எங்கள் அன்னை


ஆசையோடு அறிவு சேரும்
அவலமான பூமியில்
ஆதரவு தரவெனவே
வந்து விட்டாள் அன்னை

No comments:

Post a Comment