
பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்த அன்னை
முத்தமிட்டு கன்னமதை
ஈரமாக்கும் அன்னை
பாரினிலே உயர்வதற்கு
பாசம் கொடுத்த அன்னை
முக்கனிகள் போல எம்மை
வளர்த்து விட்ட அன்னை
கல்வியிலே அறிவூட்டி
பாவலராய் மாற்ற
பாடுபட்டு பாரினிலே
உழைத்த எங்கள் அன்னை
ஆசையோடு அறிவு சேரும்
அவலமான பூமியில்
ஆதரவு தரவெனவே
வந்து விட்டாள் அன்னை
No comments:
Post a Comment