எழிலான காலை
இதமான வேளை
மணமான சோலை
மயக்கத்தின் வேளை
தென்றல்வந்து பாடும்
தேன்குரலும் கேட்கும்
வண்டுஇசை பாடும்
வண்ணமலர் பாரும்
பனிசுமந்த புற்கள்
பகலவனை பார்க்கும்
கனிசுவைக்க வென்று
பறவையினம் கூடும்
மலையில் இருந்து பாயும்
அருவிகதை கூறும்
கலகலக்கும் நீரில்
மீனெழுந்து வீழும்
இயற்கைஅன்னைதந்த
எழில்நிறைந்தசெல்வம்
இவை இன்ப
வெள்ளத்தின் சின்னம்
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கலகலக்கும் நீரில்
ReplyDeleteமீனெழுந்து வீழும்
இயற்கைஅன்னைதந்த
எழில்நிறைந்தசெல்வம்
இவை இன்ப
வெள்ளத்தின் சின்னம்///
வர்ணனை சூப்பருங்கோ!!!