Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Tuesday, November 17, 2009

போர்


போர் என்ற அரக்கன்
புயல் போல வந்தான்
நேரின்றி மாறாக
உயிர் காவு கொண்டான்
பாரெங்கும் குருதியாய்
பரவிட்டு போனான்
பாதளச் சிறையிலே
விழுத்திட்டு போனான்
மானிடர் வாழ்வே
மயக்கமாய் ஆச்சு
யனனிக்க உயிர்கள்
பயப்பிடல் ஆச்சு
பாதையில் குருதி
பரவியே போச்சு
மரணமாம் வாழ்க்கை
போர் சொல்லலாச்சு
இறைவனின் கொடை
பொழியுமா எம்மில்
கருணை நீ காட்டாயோ
உலகமாம் தன்னில்