
போர் என்ற அரக்கன்
புயல் போல வந்தான்
நேரின்றி மாறாக
உயிர் காவு கொண்டான்
பாரெங்கும் குருதியாய்
பரவிட்டு போனான்
பாதளச் சிறையிலே
விழுத்திட்டு போனான்
மானிடர் வாழ்வே
மயக்கமாய் ஆச்சு
யனனிக்க உயிர்கள்
பயப்பிடல் ஆச்சு
பாதையில் குருதி
பரவியே போச்சு
மரணமாம் வாழ்க்கை
போர் சொல்லலாச்சு
இறைவனின் கொடை
பொழியுமா எம்மில்
கருணை நீ காட்டாயோ
உலகமாம் தன்னில்